Wednesday, June 10, 2015



இறைவா !
நீ எங்கிருக்கிறாய்!

அழகான வான் மேகத்தில்
மறைந்திருக்கிறாயா

பூமியின் பாதாளத்தில்
புதைந்திருக்கிறாயா

பூக்களின் வாசத்தில்
ஒளிந்திருக்கிறாயா

என்றெல்லாம் ஒரு நேரம்
இசை பாடினேன்

இன்று நீ இருக்கும் இடம் அறிந்து,
நெஞ்செல்லாம் குளிருதடா
என் உணர்வெல்லாம் நடுங்குதடா

பிடறி நரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கிறாய்
பிஞ்சு முகத்திலே பழுத்திருக்கிறாய்
நல்ல உள்ளத்தின் புதையலில் புதைந்திருக்கிறாய்
தொழுகையின் அடக்கத்தில் நிறைந்திருக்கிறாய்
நோன்பின் கிறக்கத்தில் கலந்திருக்கிறாய்
என் கவிதைக்கு அருகே

உன்னோடு பேசி
மனம் மகிழ்ந்து
நடை போட்டதில்
சொல்கிறேன்

நீ என்னோடு இருக்கிறாய்
இறைவா
நீ என்னோடு இருக்கிறாய்
இறைவா!


~ Hyrun Rahman ~

0 comments:

Post a Comment